முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இன்று(05) அதிகாலை இராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேற்படி அறுவரும் நேற்று முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்குச் சென்று மன்னாரில் இருந்து சட்டவிரோதமாகக் கடல் வழியாகப் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை இராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டையை சென்றடைந்துள்ளனர்.
தந்தை, தாய் மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளடங்களாக 6 பேர் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கை தமிழர்கள் ஆறு பேரையும் மீட்ட பொலிஸார் மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
