முல்லைத்தீவு காட்டினுள் மரை ஒன்றினை வெடி வைத்து இறைச்சியாக்கிய ஒருவரை புதுக்குடியிருப்பு வனவள பாதுகாப்பு திணைக்களத்தினரால் கைது
4 months ago

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காட்டினுள் அத்துமீறி உள்நுழைந்து மரை ஒன்றினை வெடி வைத்து இறைச்சியாக்கி கொண்டிருந்த ஒருவரை புதுக்குடியிருப்பு வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் புதுக்குடியிருப்பு மன்ன கண்டல் ஒதுக்க காட்டினுள் அத்துமீறி நுழைந்து கட்டுத்துவக்கால் மரை ஒன்றினை வெடி வைத்து இறைச்சியாக்கும் போது புதுக்குடியிருப்பு பகுதி வன அதிகாரி தலைமையின் கீழ், விசேட அதிரடிப் படையினர் மற்றும் திணைக்களத்தினரால் சுற்றி வளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர் இதன்போது கைது செய்யப்பட்டதோடு மரை இறைச்சியும், மரையை சுடுவதற்கு பயன்படுத்திய கட்டுத்துவக்கும் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து மேலதிக நடவடிக் கைகளுக்காக வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
