மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவீரர் துயிலும் இல்ல துப்புரவு பணியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டுள்ளது
7 months ago

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்யும் நடவடிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்துள்ளனர்.
இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளதை முன்னிட்டு மட்டக்களப்பிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்யும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக முன்னணி தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் தலைமையில் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை கண்டலடி, தரவை, தாண்டியடி, மாவடி முன்மாரி ஆகிய நான்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ளன.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
