
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு, திம்பிலி பகுதியினைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 16 வயதுடைய சிறுமி ஒருவரை காதல் என்ற பெயரில் காதலித்து தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது அங்கு சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமி தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
