இந்திய கடலில் நின்ற இலங்கை பைப்பர் படகும் 3 இலங்கை மீனவர்களும் இந்தியக் கடலோரக் காவல் படையினரால் கைது.
7 months ago

இந்தியாவின் தொண்டி கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இலங்கை பைப்பர் படகையும் அதிலிருந்த மூன்று இலங்கை மீனவர்களையும் இந்தியக் கடலோரக் காவல் படையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இந்திய எல்லைக்குள் இயந்திரக் கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்த மூவரே கைது செய்யப்பட்டு மண்டபம் முகாமுக்குக் கொண்டு சென்றனர்.
இந்தியக் கடலோரக் காவல் படையின் மண்டபம் முகாமில் முழுமையான விசாரணைக்குப் பின்னர் மேற்படி மீனவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்தியக் கடற்பகுதிக்கு வந்தார்களா அல்லது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்களா எனக் கண்டறிந்த பின்னர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று இந்தியக் கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
