தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ். தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று கையளித்தனர்.
7 months ago




தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று (07) கையளித்தனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய தினம் பிற்பகல் 12.00 மணியளவில் யாழ். மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தது.
இதன் பிரகாரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந் திறன், கனகரட்ணம் சுகாஸ், நடராஜர் காண்டீபன், வாசுகி சுதாகரன், ஜெகதீஸ்வரன், க.ஞானகுணேஸ்வரி, மேலிஸ் ஜின்சியா, எம்.நடனதேவன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
