காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி நாங்கள் போராடி வருகின்ற நிலையில் இதுவரை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரவில்லை. மனுவல் உதயச்சந்திரா தெரிவிப்பு.

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி நாங்கள் கடந்த 15 வருடங்களாக வீதியில் இறங்கி போராடி வருகின்ற நிலையில் இதுவரை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரவில்லை.எனவே இம்முறை இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எமக்கான நீதியைப் பெற அணிதிரண்டு குரல் கொடுப்போம். என்று மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் தொடர்ந்தும் ஒற்றுமையாக சர்வதேசத்திடம் குரல் எழுப்பி வருகிறோம்.
காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க அனைவரும் அணிதிரள வேண்டும். ஜனாதிபதியாக ஆட்சிக்கு யார் வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை- என்றார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
