யாழ்.நல்லூர் ஆலய முன் வீதியில் அசைவ உணவு கடை திறப்பதற்கு மாநகர சபைக்கு 5 இலட்சம் இலஞ்சம் வழங்கப்பட்டதா?

1 week ago



யாழ்.நல்லூர் ஆலய முன் வீதியில் அசைவ உணவு கடை திறப்பதற்கு மாநகர சபைக்கு இலஞ்சம் வழங்கப்பட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நல்லூர் ஆலய திருவிழா காலங்களில் மூடப்படும் பருத்தித்துறை வீதியின் நுழைவாயிலின் உள்ளேயே மாநகர சபைக்கு முன்னேயே இந்த அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகம் திறந்தது தமக்கு தெரியாது என்று ஆணையாளர் சொல்கிறார். எவ்வளவு வேடிக்கையான விடயம் இது. 

யாழ்ப்பாணத்தின் ஆலயங்களில் முதன்மையாக இருக்கும் இந்த ஆலயத்தின் புனிதத்தை இல்லாமல் செய்வதற்காகவே சிங்களவர் ஒருவரால் இந்த கடை திறக்கப்பட்டுள்ளது என்றே எண்ணத்தோன்றுகிறது.

இதற்காக யாழ்.மாநகர சபைக்கு இலஞ்சம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மக்களிடம் எழுகிறது.

யாழ்.மாநகர சபையில் வேலை செய்பவர்கள் இந்த ஆலய சூழலில் அசைவ உணவுக் கடை வருவதை விரும்புகிறார்களா? அல்லது இலஞ்சம் வாங்கியதால் கண்டும் காணாமல் விட்டுள்ளார்களா? என்பதுதான் தெரியாமல் உள்ளது.

யாழ்.நகரில் ஒரு மூலையில் சின்ன பெட்டிக்கடை போட்டாலே ஓடிவந்து குதிப்பவர்கள் மாநகர சபை அலுவலர்கள், இந்த கடை திறப்புக்கு சம்பந்தம் இல்லாமலே இருக்கும்.

உழைக்க வேண்டும் அதற்காக புனிதத்தை அசிங்கப்படுத்தும் அளவுக்கு உழைக்க கூடாது என்று இந்த அசைவ உணவு கடையை மூடுமாறு போராடினவர்கள் சொன்னார்கள்.

கடையை மூடுமாறு சொன்னால் கடைக்கு முன்னால் இருந்த விளம்பர பலகையை மட்டும் அகற்றி இருக்கிறார்கள். 

5 இலட்சம் ரூபாய் மாநகர சபைக்கு கைமாறியதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முனுமுனுத்தனர்.


அண்மைய பதிவுகள்