கனடாவின் வடகிழக்குப் பகுதியில் காணாமல் போன இரண்டு குழந்தைகள் தொடர்பில் எந்த ஆதாரமும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை

கனடாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள நோவா ஸ்கோஷியாவின் லான்ஸ்டவுன் ஸ்டேஷனில் காணாமல் போன இரண்டு குழந்தைகள் தொடர்பான விசாரணையில் மூன்று வாரங்கள் கழிந்தும் அவர்கள் குறித்து எந்த ஆதாரமும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
5 வயதான லில்லி சுலிவன் மற்றும் 4 வயதான ஜாக் சுலிவன் ஆகிய இருவரும் மே 2 ஆம் திகதி காலை தங்கள் வீட்டை விட்டு வெளியேறியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்று காலை 10 மணிக்கு அவசர அழைப்பு (911) ஒன்று வந்ததாகவும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து 160க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தொண்டர்கள். மோப்ப நாய்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் வெப்பத் தடயங்களை கண்டறியும் ட்ரோன்கள் உதவியுடன் வனப் பகுதிகளில் ஐந்து நாட்கள் விரிவான தேடல் நடத்தப்பட்டது.
ஹலிபாக்ஸிற்கு 140 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மலை மற்றும் அடர்ந்த காடுகள் கொண்ட பகுதியில் 5 சதுர கிலோ மீற்றருக்கும் மேல் தேடப்பட்டது.
மே 7ஆம் திகதி, குழந்தைகள் காட்டில் இவ்வளவு நாள் உயிருடன் இருப்பது சாத்தியமில்லை என பொலிஸார் தெரிவித்ததுடன், தேடல் வேகத்தைக் குறைத்தது.
அதே நாளில், காணாமல் போன குழந்தைகளின் தவிர்க்க முடியாத நபராகக் கருதப்படும் டேனியல் மார் டெல், விசாரணைக்கு தானாகவே சென்று நான்கு மணி நேரம் விசாரணை பெற்றதாக தெரிவித்தார்.
நான் 100 சதவீதம் ஒத்துழைக்கிறேன்," என அவர் கூறினார். என் கைப்பேசியைக் கொடுத்தேன், மது போதை மற்றும் பொய்ப் பரிசோதனைகளுக்கும் சம்மதித்தேன். மே 8 மற்றும் 9 ஆம் திகதிகளில், பொலிஸார் அருகிலுள்ள குளங்கள் மற்றும் ஆறுகளைத் தேடினர்.
மே 13 ஆம் திகதி, குடும்பத்தினரும் உட்பட பலர் உத்தியோகபூர்வமாக விசாரணைக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் கடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என அதிகாரிகள் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த வார இறுதியில், 100க்கும் மேற்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு தொண்டர்கள் குழந்தைகள் காணாமல் போன வீடு அருகிலுள்ள பகுதிகளில் மீண்டும் தேடல் நடத்தினர்.