யாழ்.பருத்தித்துறை வடக்கு கடற்பரப்பில் எதிர்வரும் 2 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் சூட்டுப் பயிற்சி
1 month ago

யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கான அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது எதிர்வரும் 02 ஆம் திகதி காலை 09.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை வடக்கு பருத்தித்துறை கடற்பரப்பிற்கு உயரே இலங்கை கடற்படை கப்பல்களான பி - 423, பி - 433, பி- 483 ஆகிய கலங்களிலிருந்து சூட்டுப்பயிற்சி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட கடற் பிரதேச எல்லைக்குள் கடற்றொழிலாளர்கள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு யாழ். கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரால் அனைத்து கடற்றொழில் சங்கங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
