யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
4 months ago

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் இம்மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 10ஆம் திகதி நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுட்ட 23 இந்திய மீனவர்களை கைது செய்த கடற்படையினர் மறுநாள் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் மயிலிட்டியில் வைத்து துறைமுகத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது நேற்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் 23 மீனவர்களையும் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
