


மன்னார், வங்காலை பகுதியில் 2 ஆயிரத்து 888 கிலோகிராம் பீடி இலைகளைக் கடத்திச் செல்ல முயன்ற மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது 80 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 888 கிலோ பீடி இலைகளை பொலிஸார் கைப்பற்றினர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக் கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
