யாழ்.உரும்பிராயில் உணவு அருந்திக் கொண்டு இருந்தவர் சுகவீனமடைந்த நிலையில் திடீரென நேற்று உயிரிழந்துள்ளார்.
3 months ago

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உணவு அருந்திக் கொண்டு இருந்தவர் சுகவீனமடைந்த நிலையில் திடீரென நேற்று உயிரிழந்துள்ளார்.
உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த காசிப்பிள்ளை குவேந்திரன் (வயது 62) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது-
குறித்த நபர் நேற்று மதியம் பாண் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவேளை அவருக்கு மூச்சு விட சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் சிகிச்சைக்காக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
ஆஸ்துமா காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
உடற்கூறு பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
