சமஷ்டியை வழங்கினால் இலங்கையை வளர்ப்பதற்கு தயார்' --கனடாவில் சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு.

3 months ago



'சமஷ்டி ஆட்சியை தமிழருக்கு வழங்கினால் இலங்கையை வளர்ப்பதற்கு நாங்கள் தயார்' என்று கனடாவில் சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு.

எங்களை நாங்கள் ஆள்கின்ற ஓர் ஆட்சி முறை தமிழர்களுக்கு வழங்கும் போது, இலங்கை என்ற நாட்டை வளர்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று ஜனாதிபதி அநுரவிடம் குறிப்பிட்டிருந்தேன்."-இவ்வாறு கனடாவுக்கு வந்திருக்கும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கனடாவின் ரொன்றோவில் இடம்பெற்ற தமிழ் மக்களுடனான சந்திப்பில் உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.