
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலிப் பகுதியில் இன்று சனிக்கிழமை ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
மேற்படி நபர் வீட்டில் சடலமாகக் கிடப்பதைக் கண்ட உறவுகள் மானிப்பாய் பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் தனது மனைவி அதிக கடன் பெற்றதன் காரணமாக மனவிரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
