பணக்கார நாடுகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை குறைப்பதால், பஞ்சம் மோசமடைவதாக ஐ.நா தெரிவிப்பு
5 months ago

உலகின் பணக்கார நாடுகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை குறைத்து வருவதன் காரணமாக, பஞ்சம் மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் உலகில் 307 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும் என்றும், அவர்களில் 60 சதவீதத்தினர் மட்டுமே உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2025ஆம் ஆண்டில் உலகில் 117 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்காது என ஐ.நா எச்சரித்துள்ளது.
இந்த வருடமும் ஐக்கிய நாடுகள் சபை, தேவைப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க 49.6 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை என்று மதிப்பிட்டிருந்தது,
ஆனால் அதில் 46 சதவீதத்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்ததாக தெரியவருகிறது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
