விடுதலைப் புலிகள் புதைத்து வைத்தனர் என்று கூறப்படும் ஆயுதங்கள் - தங் கத்தைத் தேடிய சிப்பாய் உட்பட மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப் படையின் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோய் சுமணவர்த்தன தலைமையில் மன்னார் முகாம் கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகரின் பரிந்துரைக்கமைய மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்பாடு வீதி, தாராபுரம் பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குருநாகலைச் சேர்ந்த 49வயதான சிப்பாய், வவுனியாவைச் சேர்ந்த 29 வயது நபர், அநுராதபுரத்தைச் சேர்ந்த 62 வயது நபர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் மடிக் கணினி, ஸ்கானர் இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
