
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்றுச் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயது இளைஞனே யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
யாழில் நீண்ட காலத்தின் பின்னர் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது கருதப்படுகிறது.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
