யாழ்.வயாவிளான் - அச்சுவேலி வீதி சுமார் 2 கிலோமீற்றர் தூர வீதி இன்று திறந்து வைக்கப்பட்டது.
7 months ago



யாழ்.வயாவிளான் - அச்சுவேலி வீதி நோக்கி செல்லும் சுமார் 2 கிலோமீற்றர் தூர வீதி இன்று (01) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.
உயர் பாதுகாப்பு வலயமாகவும் இராணுவ முகாமுக்கு அருகாமையிலும் உள்ள இந்த வீதி நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தது.
அண்மையில், ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவை சந்தித்தபோது, குறித்த வீதியை திறந்து வைத்து மக்களின் போக்குவரத்துக்கு வழிசமைக்குமாறு கேட்டிருந்தார்.
இதன்படியே, இந்த வீதியை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
