கச்சதீவுப் புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா மார்ச் மாதம் 14,15ஆம் திகதிகளில் இடம்பெறும்
4 months ago

கச்சதீவுப் புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா மார்ச் மாதம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது
2025ஆம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவை இம்முறை மார்ச் மாதம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டப் பதில் செயலாளரின் ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கைக் கடற்படை, நெடுந்தீவுப் பிரதேச செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் இந்தத் திருவிழாவை மேற்கொள்ள நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன - என்றுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
