தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு நேற்று கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனிடையே சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஃபெங்கல் புயல், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடற்கரையை புதுச்சேரி அருகில் நேற்று முன் தினம் இரவு 11.30 அளவில் கடந்தது.
புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீற்றர் வேகத்திலும் வீசியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், நேற்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் கடலூருக்கு வடக்கே 30 கிலோ மீற்றர் தொலைவிலும் புயலாக நிலைகொண்டிருந்தது.
மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து அடுத்த 6 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலவக்கூடு மெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
