ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் விடுமுறைக்காக சென்றிருந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 months ago

ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் விடுமுறைக்காக சென்றிருந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.
நீண்ட காலமாக ஜேர்மன் நாட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் விடுமுறையை கழிக்க தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.
கடந்த சனிக்கிழமை தனது மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்ற வேளை விபத்தில் சிக்கி இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
மேலும் அவரது மனைவி தொடர்ந்து யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
