யாழ்.தையிட்டி விகாரை காணி விகாரைக்குச் சொந்தம், யாருக்கும் கையளிக்க முடியாது -- அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ். மாவட்ட செயலருக்கு கடிதம்

யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணி என்பன விகாரைக்குச் சொந்தமானது எனவும், அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ். மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
அந்தக் கடித்ததில் கடந்த டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை பொது மக்களுக்கு கையளிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
குறித்த கூட்டத்துக்கு விகாரைக்கு பொறுப்பான விகாராதிபதியையோ விகாரை நிர்வாகத்தினரையோ அழைத்திருக்கவில்லை.
எனவே அந்த இணைக்கப்பாட்டை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது.
விகாரை அமைக்கப்பட்டுள்ள 07 ஏக்கர் காணி, அதனைச் சூழவுள்ள காணி என 14 ஏக்கர் காணியையும் விகாரைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாறாக விகாரைக்குச் சொந்தமான காணிகளை பொது மக்களுக்கு வழங்க முடியாது.
விகாரைக்கு உரிய காணியில் பௌத்த சமய முன்னேற்றத்துக்கான சைத்யம், புத்த மெதுரா, போதி, அன்னதான மடம், மடாலயம், ஓய்வு மண்டப வசதிகள், தியான மண்டபங்கள் பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும்.
அதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் - என குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
