யாழ். சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவர் கைது

யாழ். தென்மராட்சி. சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாகப் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவர் இன்று திங்கட்கிழமை சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகர்ப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் போதைப் பொருள் குற்றச் செயல் தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல்களுக்கு அமைவாக சாவகச்சேரியில் உள்ள பிரபல பாடசாலையின் தரம் 10 மற்றும் 11 மாணவர்கள் மூவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் மரத் தளபாட திருத்த வேலை செய்யும் வர்த்தக நிலையத்தை நடத்தும் 45 வயதான வர்த்தகர் ஒருவரிடம் இருந்து போதை மாத்திரைகள் பெற்றுக்கொள்வது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் மேற்படி வர்த்தகர் 330 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் ஜஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனத் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தான் ஜஸ் போதைக்கு அடிமையானவர் எனவும், போதை மாத்திரைகளைப் பாடசாலை மாணவர்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜஸ் போதைப் பொருளைப் பெற்றுப் பாவித்து வருகின்றார் எனவும் பொலிஸாரிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

யாழ்.மாநகர சபையின் மேயர் பதவிக்குத் திருமதி. விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரை

அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன, இன்று (09) காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரியை பிரதமர் மார்க் கார்னி புகழ்ந்து பாராட்டியுள்ளார்
