கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரியை பிரதமர் மார்க் கார்னி புகழ்ந்து பாராட்டியுள்ளார்


கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரியை பிரதமர் மார்க் கார்னி புகழ்ந்து பாராட்டியுள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் கரி ஆனந்தசங்கரி தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.
கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்த சங்கரி மிகவும் நேர்மையானவர் எனவும் தனது கடமையை சிறந்த முறையில் மேற்கொள்பவர் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கரி ஆனந்தசங்கரி தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் எவ்வாறு நேர்மைத் தன்மையுடன் நடந்து கொள்வார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக கரி ஆனந்த சங்கரி தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவான வகையில் செயற்பட்டு வருகின்றார் என குற்றம் சுமத்தி இந்த கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதன் போது கரி ஆனந்த சங்கரி மிகவும் நேர்மையான முறையில் தனது பதவியின் கடமைகளை செய்து வருகின்றார் எனவும் எந்த இடத்தில் எதனை செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த தெளிவுடன் செயல்பட்டு வருகின்றார் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனவே தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கரி ஆனந்தங்கரி நீதி அமைச்சராகவும் நாட்டின் சட்ட மா அதிபராகவும் கடமையாற்றியவர் எனவும் எனவே அவரது பதவி தொடர்பில் தெளிவுடன் செயற்பட்டு வருகின்றார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

யாழ்.மாநகர சபையின் மேயர் பதவிக்குத் திருமதி. விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரை

அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன, இன்று (09) காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரியை பிரதமர் மார்க் கார்னி புகழ்ந்து பாராட்டியுள்ளார்
