சஜித் பிரமதாஸவுக்கு ஆதரவு அளிக்குமாறு சில வெளிநாட்டுத் தூதரகங்கள் மறைமுகமாக வற்புறுத்துகின்றன”, என்று பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு.
8 months ago

சஜித் பிரமதாஸவுக்கு ஆதரவு அளிக்குமாறு சில வெளிநாட்டுத் தூதரகங்கள் மறைமுகமாக வற்புறுத்துகின்றன”, என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் பணிமனையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், "தமிழ் அரசுக் கட்சியின் குறிப்பிட்ட சில தலைவர்களை மாத்திரம் சொல்லி விடமுடியாது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்குமாறு சில வெளிநாட்டு தூதரகங்கள்கூட மறை முகமாக வற்புறுத்தி வருகின்றன.
தற்போதைய நிலையில் புதிய ஜனாதிபதியாக யார் வரப் போகின்றார் என்பதைவிட தமிழ் மக்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து ஒரு தேசமாக திரண்டு விடுவார்களோ என்பதே எல்லோரினதும் அச்சமாக உள்ளது என்றும் கூறினார்.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
