யாழில் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்காக, போலி அனுமதிப்பத்திரம் வைத்திருந்த கனேடியப் பிரஜை ஒருவர் கைது

யாழில் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்காக, போலியாகத் தயாரிக்கப்பட்ட தற்காலிக அனுமதிப்பத்திரம் வைத்திருந்த கனேடியப் பிரஜை ஒருவர் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவிலிருந்து கடந்த தடவை இலங்கைக்கு வந்திருந்தபோது, பிறிதொருவரின் உதவியுடன் அவர் சாரதி அனுமதிக்கான தற்காலிக அனுமதிப் பத்திரத்தைப் பணம் செலுத்திப் பெற்றுள்ளார்.
இம் முறை மீண்டும் கனடாவிலிருந்து வந்துள்ள நிலையில் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்காக மோட்டார் திணைக்களத்துக்குச் சென்றபோதே அவர் ஏற்கனவே பெற்றிருந்த தற்காலிக அனும்திப்பத்திரம் போலியானது என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பில், யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
