இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய இழுவைமடி படகுகளை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக நேற்று கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“இந்திய அரசே எமது கடல் வளங்களை சூறையாடாதே - எம்மையும் வாழவிடுங்கள்" என்று கோரிக்கையை முன்வைத்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மருதடி சந்தியில் இருந்து கடற்றொழிலாளர்கள் பேரணியாக இந்திய துணைத் தூதரகத்துக்கு சென்று அங்கு நின்றவாறு இலங்கை கடற்படையே நிறுத்து நிறுத்து அத்துமீறலை தடுத்து நிறுத்து, கடற்தொழில் அமைச்சரே கண்ணை திறந்து பார், இந்திய அரசே எம்மையும் வாழ விடு, சிறீலங்கா பொலிஸே எங்களைத் தடுக்காதே போன்ற கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் முடிவில் இந்திய துணைத் தூதுவரிடம் கடற்றொழிலா ளர் பிரதிநிதிகள் கோரிக்கை மனுவை கையளித்தனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
