உரிய அனுமதியின்றி இலங் கைக்கு கொண்டுவரப்பட்டதாக கருதப்படும் ஆபிரிக்க காட்டுப் பூனையொன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தின் சுங்க அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் காட்டுப் பூனை இலங்கையில் காணப்படும் சிறுத்தையை ஒத்ததாக கருதப்ப டுகிறது.
குறித்த விலங்குகள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படுவதாகவும், அதனால் சர்வதேச ரீதியில் இவற் றுக்கு அதிக கேள்வி நிலவுவதா கவும் சுங்க அதிகாரிகள் தெரி வித்தனர்.
கண்டியைச் சேர்ந்த நபர் ஒருவரினால் இந்தக் காட்டுப் பூனை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள்
சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த காட்டுப் பூனை தெஹிவளை தேசிய மிருகக் காட்சிச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.
இலங்கை சுங்கத்தின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாதுகாப்பு பிரிவு மற்றும் வன விலங்கு பாதுகாப்புத் திணைக்களம் இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
