யாழில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிய கனடா ஆராய்ச்சியாளர் நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்
4 months ago

யாழ்ப்பாணத்தில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக் கொண்டிருந்த ஆராய்ச்சியாளர் நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் - கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 13 ஆம் திகதி கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
இவர் கனடா பல்கலைக்கழகத்தில் ஒரு விவசாய ஆராய்ச்சியாளராக உள்ளார்.
நேற்று பல்கலைக்கழக விரிவுரியாளருடன் ஸூம் தொழில்நுட்பமூடாக ஆராய்ச்சி குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.
இதன்போது திடீரென மயங்கி கீழே வீழ்ந்தார்.
இந்நிலையில் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்த வேளை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
