
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்த நபர் காவலாளியை கடித்து காயப் படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றது.
மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை மருத்துவமனை காவலாளி தடுக்க முற்பட்டபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இதையடுத்து குறித்த நபர் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
காயமடைந்த காவலாளி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
