பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல மேற்குலக நாடுகள் முற்பட்டன. அதற்கு மஹிந்த இடமளிக்கவில்லை சரத் வீரசேகர தெரிவிப்பு

பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல மேற்குலக நாடுகள் முற்பட்டன. அதற்கு மஹிந்த இடமளிக்கவில்லை.
மேற்குலகைப் பகைத்துக் கொண்டு தான் மஹிந்த போரை முடித்து வைத்தார் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
மேற்குலக நாடுகளை பகைத்துக் கொண்டுதான் மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டுவந்தார்.
போர் முடிவடைவதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வந்தனர்.
அமெரிக்காவில் இருந்தும் குழுவொன்று வந்தது.
போரை நிறுத்துமாறு மஹிந்த ராஜபக்சவிடம் அவர்கள் வலியுறுத்தினர்.
ஏனெனில் பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல முயற்சித்தனர்.
அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் மஹிந்த போரை முடிவுக்கு கொண்டுவந்தார்.
1987ஆம் ஆண்டு வடமராட்சி சமரின் போது இந்தியா பருப்புப் போட்டவேளை, ஜே.ஆர்.ஜயவர்த்தன போரை நிறுத்தினார்.
அன்று போரை நிறுத்தியிருக்காவிட்டால் நான்கு அல்லது ஐந்து நாள்களில் போர் முடிவுக்கு வந்திருக்கும்.
வெளிநாடுகளுக்கு பணிந்தே அன்று போரை நிறுத்தினார்கள்.
ஆனால், மஹிந்த ராஜபக்ச வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை.
அதனால்தான் மஹிந்தவுடன் மேற்குலகம் பகையாக உள்ளது.
தமிழ் பிரிவினைவாத புலம்பெயர் மக்களும் மஹிந்த மீது பகையில் உள்ளனர்.
மஹிந்தவுக்கு இப்போதும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது- என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
