
இலங்கைக் கடற்பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவுஸ்திரேலியா அரசாங்கம் நவீன ட்ரோன்கள் பொருத்தப்பட்ட விசைப்படகு ஒன்றை வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்த அவர், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பில் வலியுறுத்தியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாகவே, நீண்டதூரம் பறக்கக்கூடிய நவீன கண்காணிப்பு ட்ரோன்கள் பொருத்தப்பட்ட விசைப் படகை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இலங்கையின் கடற்பரப்பில் இடம்பெறும் சட்ட விரோத வர்த்தகங்கள், போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான உதவியாகவே இந்த ட்ரோன்கள் பொருத்தப்பட்ட விசைப்படகு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசைப்படகும், ட்ரோன்களும் 12 மில்லியன் ரூபா பெறுமதியானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
