இலங்கையில் வடக்கு, கிழக்கில் 5 தொடக்கம் 11ஆம் திகதி வரை பெரு மழை வீழ்ச்சி கிடைக்கும்.-- கலாநிதி நா. பிரதீபராஜா தெரிவிப்பு

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கனமானது முதல் மிகக்கனமானது வரையான மழை வீழ்ச்சி கிடைக்கும் என்று யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை தலைவர் கலாநிதி நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த மாதத்தில் 3 தாழமுக்க நிகழ்வுகள் தோன்ற வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் 6 அல்லது 7ஆம் திகதி இலங்கைக்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் இலங்கை முழுவதையும் தன் வெளி வளையத்துக்குள் உள்ளடக்கியதாக காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையான காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
