யாழ்.போதனா வைத்திய சாலைக்குள் நுழைந்த வழக்கில் எம்.பி இ.அர்ச்சுனா, சட்டத்தரணி என்.கௌசல்யாவுக்கு பிணை

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் சட்டத்தரணி என்.கௌசல்யா ஆகியோரைத் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணையில் செல்ல யாழ். நீதிவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
யாழ். போதனா வைத்திய சாலைக்குள் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கெளசல்யா ஆகியோர் அத்துமீறி நுழைந்து வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது. குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர் மற்றும் சட்டத்தரணி ஆகிய இருவரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, வைத்தியசாலைக்குள் பணிப்பாளரின் அனுமதி இன்றி அத்துமீறி நுழைதல், முறைப்பாட்டாளருக்கு இடையூறு விளைவித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது எனச் சந்தேகநபர்களுக்கு அறிவுறுத்திய நீதிவான். சந்தேகநபர்களை தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்தார்.
குறித்த வழக்கை மேற்கொண்டு நடத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெறுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்திய நீதிவான், வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
