ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் இன்று யாழ். மத்திய கல்லூரியில் நடைபெறும் வாக்குப் பெட்டி விநியோக நடவடிக்கையை கண்காணித்தனர்.



ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் நாளைய தினம் (21.09.2024) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, இன்றைய தினம் (20.09.2024) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்குப் பெட்டி விநியோக நடவடிக்கைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, வாக்குப்பெட்டி விநியோகித்தல் நடைவடிக்கைகள் நிறைவு நாளை (21.09.2024) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு மற்றும் இதர ஆவணங்களை, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் வைத்து சம்பந்தப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று (20.09.2024) நண்பகல் 12.30 மணியளவில் சிறப்பாக நிறைவடைந்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இக் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
