


யாழ்.புங்குடுதீவுப் பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து நேற்று(18) சனிக்கிழமை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதனால் இவரது உறவினர்கள் இவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இவர் நேற்று அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த குளத்துக்கு அருகிலிருந்து இவரது சைக்கிள் மற்றும் ஆவணங்கள் என்பவை பொலிஸாரால் மீட்கப்பட்டன.
இது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
