
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகின்றது.
குறிப்பாக எல்லை மற்றும் குற்ற அமுலாக்கத்தில் சலுகைகளுக்கு அதிகபடியான வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் அதனை 30 நாள்களுக்கு தாமதப்படுத்துவதாக கடந்த திங்களன்று தெரிவித்தார்.
எவ்வாறு இருப்பினும் கனடாவின் 75 வீத ஏற்றுமதிகளும் அமெரிக்காவைச் சார்ந்துள்ளது என்பதால் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காகவும், அமெரிக்கா விதிக்கும் வரிகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்வதற்காகவும், வணிக மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் டொரொண்டோவில் ஒரு நாள் உச்சி மாநாட்டினை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கங்கள்
1. உள்நாட்டு வணிக தடைகளை குறைத்தல்.
2.ஏற்றுமதி சந்தைகளை விரிவுபடுத்துதல்.
3.தொழில்துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்த்தல்.
4.நீண்ட அனுமதி செயல் முறைகளை சீர்செய்தல்
5.அலுமினியத்தை ஐரோப்பாவிற்கு திருப்பி விடத் தீர்மானித்துள்ளமை இதேவேளை, இந்த உச்சிமாநாட்டில் வணிகத் தலைவர்கள், தொழில்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்ட போதிலும் கனேடிய பிரதமர் அலுவலகம் இதில் பங்கேற்க தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை வெளியிடவில்லை.
இந்நிலையில், இந்த உச்சி மாநாடு, அமெரிக்கா சார்ந்த பொருளாதாரத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையை குறைத்து, கனடாவுக்கென தனி வளர்ச்சிப் பாதை உருவாக்கும் முயற்சியாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
