வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி மரத்திலேறி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
9 months ago

மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக ஒருவர் மரத்திலேறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை பர பரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா - பண்டாரிக்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மரத்திலேறி போராட்டத்தில் ஈடுபட்டார். தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்று விட்டார் என்றும் அவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரியே அவர் மரத்திலேறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
நீண்டநேரம் மரத்திலிருந்து இறங்காமல் போராடியவரை ஒருவழியாக பொலிஸார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
