ரஷ்யா - உக்ரைன் இடையே நீடித்து வரும் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா முயற்சித்து வருகிறது.

ரஷ்யா - உக்ரைன் இடையே நீடித்து வரும் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா முயற்சித்து வருகிறது.
இதன் முதற்கட்டமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடின் சமீபத்தில் வழங்கிய நேர்காணலிலும், ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்னையை தீர்ப்பதில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் முக்கிய பங்காற்ற முடியும் என நம்புகிறோம் எனக் கூறினார்.
இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியும், " ரஷ்யா - உக்ரைன் பிரச்னைக்கு இந்தியா மற்றும் சீனா தீர்வு காண முடியும்" என்றார்.
இதையடுத்து ஜனாதிபதி புடினுடன் பேசிய இந்தியப் பிரதமர் மோடி. அமைதி பேச்சுகள் தொடர்பில் ஆலோசிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை அனுப்பி வைப்பதாக கூறினார்.
இந்த நிலையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா (பிரிக்ஸ்) நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் செயின்ட் பீற்றர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சென்றிருந்தார்.
இந்தக் கூட்டத்துக்கு இடையே ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் செர்கே சோய்குவை, அஜித் டோவல் சந்தித்துப் பேசினார்.
இருதரப்பு பரஸ்பர நலன்கள் குறித்து பேசிய இருவரும், உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்தும் பேசினர்.
அதன் பின்னர் ரஷ்ய ஜனாதிபதி புடினை, அஜித்டோவல் சந்தித்து உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து பேசினார்.
பிரிக்ஸ் கூட்டத்தில் பங்கேற்க வந்தி ருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யீயையும், அஜித் டோவல் சந்தித்து பேசினார்.
அப்போது இந்தியா- சீனா உறவு, இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகுக்கும் முக்கியமானது என்பதை இருவரும் ஒப்புக் கொண்டனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
