இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் -- அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவிப்பு

ஊடகவியலாளர் இசைப்பிரியா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது தலைவரின் மகன் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் நடந்த கொடூர நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் தனித்தனி நிகழ்வுகளாக எடுத்து தனித்தனி நபருக்கான நியாயத்தை வழங்க வேண்டும்.
அதனையும் தாண்டி நாட்டு மக்களின் சுதந்திரம், பாதுகாப்பு என்பவற்றை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம்.
அதேநேரம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது தலைவரின் மகன் பாலச்சந்திரனது மரணச் செய்திகேட்டு தான் துயரமடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஊடகவியலாளர் இசைப்பிரியா மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினது தலைவரின் மகன் பாலச்சந்திரனது மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.
எனினும் இதுவொரு இலகுவான விடயம் அல்ல - என்றார்
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
