யாழில் காற்றின் தரம் மிகையாகப் பாதிப்பு.-- மத்திய சுற்றாடல் அதிகாரச் சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித்குணவர்த்தன சுட்டிக்காட்டு
5 months ago

யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் மிகையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரச் சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித்குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் காற்றின் தரம் சாதகமற்ற நிலையை எட்டியுள்ளது.
சமீபத்திய மோசமான வானிலை காரணமாகவே, வடமாகாணத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றுள்ளது” என்றார்.
இதேவேளை - யாழ்ப்பாணப் பிரதேசத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒருமாத காலத்துக்குத் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், தீங்கு விளைவிக்கும் பொருள்கள் உள்ளதா என நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
