யாழில் காற்றின் தரம் மிகையாகப் பாதிப்பு.-- மத்திய சுற்றாடல் அதிகாரச் சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித்குணவர்த்தன சுட்டிக்காட்டு
4 months ago

யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் மிகையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரச் சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித்குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் காற்றின் தரம் சாதகமற்ற நிலையை எட்டியுள்ளது.
சமீபத்திய மோசமான வானிலை காரணமாகவே, வடமாகாணத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றுள்ளது” என்றார்.
இதேவேளை - யாழ்ப்பாணப் பிரதேசத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒருமாத காலத்துக்குத் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், தீங்கு விளைவிக்கும் பொருள்கள் உள்ளதா என நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
