வவுனியா காத்தார்சின்னக் குளத்தில் குருதிக்கறைகளுடன் தூக்கிலிருந்து 'இளைஞரொருவர் சடலமாக மீட்பு
1 day ago

வவுனியா காத்தார்சின்னக் குளத்தில் குருதிக்கறைகளுடன் தூக்கிலிருந்து 'இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
செல்லத்துரை கபில்நாத் (வயது -24) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞனின் உடலில் ஆங்காங்கே குருதிக்கறைகள் காணப்படுகின்றன.
எனவே, இந்த இறப்புத் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர், நேற்று முன்தினம் மாலை இளைஞர் குழுவொன்றுடன் மோதலில் ஈடுபட்டார் என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அந்தத் தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர்கள் சிலர் பொலிஸாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
