
காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெட்டிவத்த பகுதியில் சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சீன பிரஜை ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஹபராதுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதுடைய சீன பிரஜையொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 400 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
