
ஒக்ரோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இந்து மத கலாசாரம் மற்றும் மரபுகளை கொண்டாடும் வகையிலும், அங்கீகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
நவராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட முக்கிய இந்து பண்டிகைகள் பெரும்பாலும் ஒக்ரோபர் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் இந்த அறிவிப்பு கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது.
அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பு உறுப்பினர் சார்ல்டன் இந்த அறிவிப்பை விடுத்தார்.
பன்முக கலாசாரத்துக்கு அவுஸ்திரேலியாவின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டும் விதமாகவும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
மேலும், அவுஸ்திரேலிய நாட்டின் சமூக கட்டமைப்பு ரீதியாக இந்துக்களின் பங்களிப்பையும் இது அங்கீகரிக்கிறது.
இதன் மூலம் பழமை வாய்ந்த இந்து மத சம்பிரதாயங்கள், பாரம்பரியத்துக்கு அவுஸ்திரேலியா மதிப்பளிக்கிறது. இது உலக அரங்கில் தற்போது கவனம் பெற்றுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
