காணாமலாக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத்தா எனத் தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்













காணாமலாக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத்தா எனத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (30) இடம்பெற்றது.
இதன்போது, காணாமலாக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே, இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன?, ஐ.நாவே நீதியைப் பெற்றுத்தா, 15 வருடமாக போராடும் எமக்கு விடிவு இல்லையா என பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும் தாங்கியிருந்தனர்.
இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா அமர்வில் எமக்கான நீதியை பெற்றுத் தர ஐ.நா வலியுறுத்த வேண்டும்.
2025ஆம் ஆண்டிலாவது எமது 15 வருட போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
