யாழ்., வவுனியா மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடையலாம் சுற்றாடல் அதிகார சபை எச்சரிக்கை

“பெங்கல்” புயல் தாக்கத்தால் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடையலாம் என்று மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் "பெங்கல்" புயலின் தாக்கம் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் காற்றின் தரம் குறைவடையலாம்.
நாட்டில் சில பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் 92 - 120 வரை காணப்படலாம் எனவும் சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, குருநாகல், கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, புத்தளம், பதுளை, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, பொலநறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றின் தரம் குறைவடைவதன் மூலம் வளிமண்டலத்தில் மாசு அதிகரிக்கக்கூடும்.
இதனால் காற்று மாசுபாடு ஏற்படும். காற்று மாசுபாடு ஏற்படுவதால் மனிதர்கள் மத்தியில் நோய்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம்.
குறிப்பாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
