இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக சி. சிறீதரன் செயல்படுவார் மத்திய குழு அறிவிப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக சி. சிறீதரன் செயல்படுவார் என்று அந்தக் கட்சியின் மத்திய குழு அறிவித்துள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றது. இதிலேயே இந்த முடிவு எட்டப்பட்டது.
இதேவேளை, கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக பாராளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று சிறீதரன் மேலும் தெரிவித்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 7 ஆசனங்களை கைப்பற்றியது.
அத்துடன், தேசியப் பட்டியல் மூலமாக ஓர் ஆசனத்தை கைப்பற்றி 8 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் மூன்றாவது சக்தியாக உள்ளது.
தற்போது தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களில் சிறீதரன் மட்டுமே நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
அவர் கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
