யாழில் பெண் ஒருவரை போனில் அழைத்து, 10 இலட்சம் ரூபா வரையில் மோசடி.-- பொலிஸில் முறைப்பாடு
4 months ago

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரைத் தொலைபேசியில் அழைத்து, அதிஷ்டலாபத்தில் பெருந்தொகைப் பணம் கிடைத்திருப்பதாகத் தெரிவித்து 10 இலட்சம் ரூபா வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
மோசடியாளர்களின் உரையாடலை நம்பிய அந்தப் பெண், தனது வங்கிக் கணக்குத் தொடர்பான விடயங்களை அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஓ.ரி.பி. எனப்படும் ஒரு தடவை மட்டும் பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் நம்பிக்கையின் அடிப்படையில் அந்தப் பெண் கொடுத்துள்ளார்.
இதன் பின்னரேயே அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து 10 இலட்சம் ரூபா வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் தரப்பால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
