இலங்கையில் காச நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிதுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவிப்பு.

6 months ago


கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக் கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகி யுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் மட்டுமே பதிவாகியுள்ள காச நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருப்பதாக காசநோய் மற்றும் மார்பு நோய்கள் தொடர்பான தேசிய வேலைத் திட்டத்தின் சமூக சுகாதார வைத்திய நிபுணர் மிசாயா காதர் தெரிவித்தார்.